நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!
500அடி பள்ளத்தில் தலைகீழலாக கவிழ்ந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து.
கொத்மலை பேருந்து விபத்தில் 21பேர் பலி 58பேர் காயம் .
நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் 11.05.2025. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கதிர்காமத்திலிருந்து கண்டி - நுவரெலியா பிரதான வீதி ஊடாக குருணாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 500அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக கொத்மலை பொலிஷார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் 21 பேர் உயிர்ழந்துள்ளதாகவும் 58பேர் காயமடைந்துள்ளதோடு மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஷார் மேலும் தெரிவித்தனர். குருனாகல் பகுதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
